Sunday, November 27, 2011

கார்த்திக்கு ஓணான் சாட்சி.....

இடத்துக்கு ஏத்தமாதிரி தங்களை மாற்றிக்கொள்வதில் நடிக-நடிகைகள் ஆனானப்பட்ட ஓணானையே தூக்கிச்சாப்பிட்டு விடுவார்கள் என்பது தெரிந்த ச்ங்கதிதான்.
ஆனால் சமீபத்தில் நடந்த தெலுங்குதிரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பழைய ஒணான்களையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டுவிட்டார் தமிழ்ச்சிறுத்தை கார்த்தி.சிவக்குமாருக்கு லட்சங்களை சம்பளமாகத்த்ந்த தமிழ் சினிமா சூரியாவுக்கும் கார்த்திக்கும் கோடிகொடியாய் கொட்டிக்கொடுக்கிறது.சூர்யாவாவது கொஞ்சம் போராடி கோடிகளைத்தொட்டார்.ஆனால் கார்த்தி வெகு சுலபமாக உழைப்பே இல்லாமல் வெற்றியைத்தொட்டார்.இந்த சுலப வெற்றி கார்த்தியின் கொழுப்பை கொஞ்சம் அதிகரித்துவிட்டது போலும்.அதனால்தான் எனக்கு தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும் என்று கொஞ்சமும் வெக்கமில்லாமல் பேட்டி கொடுக்கிறார். அத்தோடு நில்லாமல் அத்ற்கு விளக்கெண்ணை மாதிரி ஒரு விளக்கமும் கொடுக்கிறார்.தமிழ் ரசிகர்கள் திருட்டு வ்சிடி யில் படம் பார்க்கிறார்களாம். தெலுங்கு ரசிகர்களிடம் இந்தப்பழக்கம் கிடையாதாம்.எனவே தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும் அழுத்தம்திருத்தமாக ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் முழங்குகிறார் கார்த்தி.
தெலுங்கு டப்பிங்கில் கொஞ்சம் பணம் கூடுதலாக வருகிறது என்பதற்காக இப்படி வேஷம் போட்டால் தமிழ் ரசிகர்கள் கார்த்தியை அரவணைத்த அதே வேகத்தில் வீட்டில் ரெஸ்ட்’ எடுக்கவும் வைப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
இல்லை தெலுகு ரசிகர்கர்களே நாகு ச்சால இஸ்டன் என்று தொடர்ந்து செப்புவாரேயானால்,விரைவில் ஆந்திராவுக்கே விரட்டி அடிக்க்ப்படுவார்..

No comments:

Post a Comment