Sunday, December 25, 2011

திண்டுக்கல்லுக்கு மாலன் ஏன் போனார்?என்கதைஎழுதும் நேரம் இது-2

 ஞாபக சக்தி விஷயத்தில் நான் ரொம்ப பரிதாபமான ஆள்.

அமெரிக்கன் கல்லூரியில் டிகிரி முடித்த வருடம் [1985 ] தவிர வேறு எதுவுமே அவ்வளவு சுலபத்தில் ஞாபகத்துக்கு வருவதில்லை.என் முன்னாள் நண்பர் ஒருவர் இருக்கிறார்.  ஞாபகத்திலகம் என்றே கூட அவரை அழைக்கலாம். தன் வாழ்நாளில் நடந்த சம்பவங்களை தேதி வாரியாக, இடம் வாரியாக, நேரம் வாரியாக , சம்பவத்தன்று போட்டிருந்த ஜட்டியின் நிறம் வாரியாக எல்லாவற்றையும் சரியாகச் சொல்லுவார். நான் எழுதப்போகும் சம்பவம் நடந்த வருடம் ஞாபகம் இல்லை.அநேகமாக 98 ஆக இருக்கக்கூடும்.
 சம்பவத்துக்குப் போகுமுன், கடந்த வாரம் நடந்த ஒரு சர்ச்சைக்குள் போய்விட்டு வருவோம். சர்ச்சைக்குள் போவதற்கு முன் ஒரு சிறு சந்துக்குள் போய்விட்டு வருவோம்.
 அது எழுத்தாளர் மணாவின் சந்து.
. ‘அகிலா நியூஸ் ஏஜென்ஸி’ என்று ஒன்று வைத்துக்கொண்டு ஏறத்தாழ தமிழகத்தின் அத்தனை பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர் நம்ம மணா.  எங்கேயும் எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டே இருப்பார். துக்ளக் தொடங்கி குமுதம் வரை கடந்த 26 ஆண்டுகளில்  ஆண்டுக்கு ஆயிரம் வீதம் சுமார் 26000 கட்டுரையாவது எழுதியிருப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவர் தனது அயராதஉழைப்பால், கமலைப்பற்றி இதுவரை எல்லாபத்திரிகைகளிலும் வந்த செய்திகளைத் தொகுத்து கடந்த வாரம் ‘நம் காலத்து நாயகன்’ என்று ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் எழுத்துலக மேதை, மாலன், கமலைப் பற்றி எழுதியதை மட்டும் மணா போடாமல் விட்டுவிட்டாராம். இதைப் பற்றி மாலன் ஒன்றும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று நினைத்த மணா, மாலனையும் புத்தகத்தை பாராட்டிப் பேச தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருக்கிறார்,.

ஒரு எடிட்டருக்கான அடிப்படைத் தகுதி நீளம் கால அளவு பற்றிய அறிவு இருப்பது தான். அதுவும் ஒரு விழாவில் பேச வரும் போது மொத்தம் எத்தனை  பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அதில் தான் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்று உணர்ந்து நேரம் எடுத்துக் கொள்வது தான் பொது அறிவு. பொது அறிவும் அதுதான். பொதுவாவே அறிவும் அதுதான். ஆனால் மாலனுக்கு இந்த அறிவு துளியும் கிடையாது. சமீபத்தில் பன்னிரெண்டு விஐபிக்கள் பங்கெடுத்த இறையன்பு அவர்களின் புத்தக வெளியீட்டில் இவர் ஒருவர் மட்டுமே நாற்பது நிமிடங்களை எடுத்துக் கொண்டு பத்திரிக்கைகளில் இழவுச் செய்தி என்று அவராகவே ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு மொத்த அரங்கத்தையுமே இழவு வீடாக்கினார்.

அந்த அனுபவத்தில் மணா நிகழ்ச்சியிலும் , அடுத்து மாலன் பேசப்போறார், எப்பவும் போல ஒரு மணி நேரம் தூங்கி முழிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சியைக் கொடுத்தார் மாலன். ’வெகுஜன ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கிடயாது. அந்த வகையில்  இந்த புத்தகம் ஒரு குப்பை’ என்று மாலன் பேச ஆரம்பிக்க, புத்தக வெளியீட்டாளர் மனுஷ்யபுத்திரனுக்கு அதிர்ச்சி. மணாவுக்கோ பேரதிர்ச்சி. அடுத்து கொஞ்ச நேரத்துக்கு ஆளாளுக்கு பார்வைகளாலேயே கெட்ட வார்த்தைகளைப் பரிமாரிக்கொண்டு விழாவை முடித்தனர்.

மாலன் பத்திரிகை உலகில் ஒரு புண்ணாக்கும் சாதிக்காதவர். சுமார் இரண்டு டஜன் பத்திரிகைகளுக்காவது எடிட்டராகப் பொறுப்பேறறிருக்கிறார். புதிதாக ஒரு பத்திரிகையில் எடிட்டராகப் பதவி ஏற்பதற்கு முன்னர் அந்த நிர்வாகத்திடம் வேலையில் சேர்ந்து கொள்ள ஒரு நாள் அவகாசம் கேட்பாராம் மாலன்.அந்த ஒரு நாள் அவகாசம் எதற்கு என்பது பத்திரிக்கை உலகத்துக்கு நீண்ட நாள் புரியாத புதிராக இருந்ததாம். பிறகு ஒரு நிருபர் அந்த ஒரு நாள் அவரை விடாமல் ஃபாலோ பண்ணியபோதுதான், திண்டுக்கல்லில் போய் பூட்டு வாங்கி விட்டுத்தான் வேலையிலேயே சேருகிறார் என்கிற சீக்ரெட் வெளியே வந்தது.

சுவாரசியமாக ஒரு கட்டுரை எழுதத்தெரியாது. ஒரு தலைப்பு வைக்கத்தெரியாது. ஆனால் பத்திரிகை ஆபிஸில் பிரமாதமமாக சுதிபிசகாமல் சங்கீதக்குறட்டையோடு தூங்குவார்.  பக்கத்தில் ராவ் இருந்தாரானால் இவர் ஆரோகணமென்றால் அவர் அவரோகணம்.
 எனக்குத்தெரிந்து ஞானமே சற்றும் இல்லாதவர்கள் அதிகம் ஆசிரியராக இருப்பது நம் தமிழ் நல்கூறு பத்திரிகை உலகில்தான் என்று நினைக்கிறேன்.
முதலாளிகளே தங்களை ஆசிரியர் என்று போட்டுக்கொள்ளும் மூடத்தனமும் இங்கேதான் அதிகம் என்று நினைக்கிறேன்.
ஒரு அரசியல் பத்திரிகையின் ஆசிரியர் பத்திரிகை ஆரம்பித்த முதல்
 ஆறு மாதங்களுக்கு தன் கையெழுத்தைக் கூட கேபால் என்றே போட்டுவந்தார்.

சரி அதப்பத்தியெல்லாம் பிறகு பேசலாம்’

சம்பவத்துக்கு வருவோம். அண்ணே சம்பவம் சம்பவம்னு ஏதோ சொல்ல வர்றீங்க .அப்புறம் குறுக்க நீங்களே புகுந்து உங்களையும் குழப்பி எங்களையும் குழப்புறீங்களே? என்ற உங்க மனக்குமுறல் கேக்கத்தான் செய்யுது.

அது நடந்தது 98 ல் தான் என்று மீண்டும் நினைக்கிறேன். இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து என்னிடமிருந்த‘ திலகாஷ்ட மகிஷ பந்தனங்களை ’பேக் அப் பண்ணி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். ஊரில் போய் ஒரு அஞ்சு வருஷத்துக்கு பலசரக்கு கடைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல், நன்றாகச் சம்பாதித்துவிட்டு சென்னைக்குத் திரும்பி வந்து பட வாய்ப்புகள் தேடி பழையபடி சீரழிவது என்பது அப்போதைய உத்தேசம். இதை  எப்படியோ கேள்விப்பட்டு மனஉணர்ச்சிக் கொந்தளிப்பு நிலையை அடைந்த மணா என்னை அழைத்தார். பிரித்திஷ் நந்தியோ,குஷ்வந்த் சிங்கோ,பத்திரிகை துறையை விட்டுவிட்டு, பலசரக்குக் கடைக்கு போவது போல கொஞ்சம் ஓவராகவே இருந்தது அவரது ஃபீலிங்ஸ். பட் ஐ லைக் தேட்.
அவரே எனக்காக ஒரு ‘என்குறிப்பு’ தயாரித்தார். வேற எதுவும்  பேசக்கூடாது. நாளைக்குக் காலைல என்னை ‘குமுதம் ‘ ஆபிஸ்ல வந்து பாருங்க’ என்றபடி
கிளம்பினார். நான்கொஞ்சம் குழம்பினேன்.மறுநாள்,  குமுதம்  அலுவலகம். கேட்டில் காத்திருந்து என்னை அழைத்துப்போனார் மணா. கொஞ்ச காலமாக எழுதுகிற வேலையை விட்டுவிட்டு  இப்படி குமுதத்துக்கு இந்த ‘புள்ள புடிக்கிற’ வேலையை மட்டும்தான் பார்க்கிறார் என்பது அப்போதுதான் தெரிந்தது.
 ரிஷப்சனில் உட்கார வைத்து, எனக்கு ,குமுதத்தில் என்ன மாதிரி பாலிட்ரிக்ஸ் நடக்கும் அதை சமாளிப்பது எப்படி என்று பாடம் நடத்தினார் மணா.
ஒரு வழியாக  ஆசிரியரை சந்திக்க அழைப்பு வந்தது.ஒரு கேபினைக்காட்டி உள்ளே போகச்சொன்னார்கள்.உள்ளே போனால் ஆசிரியர் மாலன் அயர்ந்து
நான்


மணா

[மாலன்]
தூங்கிகொண்டிருந்தார்....[தொடரும் போடுவதற்கு இதுவே சரியான இடம் என்று நினைக்கிறேன்.அடுத்த கட்டுரை குமுதத்தில் என் முதல் நாளும் மாலனின்  கடைசி நாளும்].

3 comments:

  1. இப்பல்லாம் பிரிண்ட்ல வற்ற பத்திரிககைகளவிட இந்த இணைய இதழ்கள்தான் இன்ட்ரஸ்டிங்காக இருக்கு ... வாழ்த்துக்கள் ,

    ReplyDelete
  2. அசத்தலாக இருக்கிறது செய்தியும் நடையும். பின்னி பெடல் எடுக்குறீங்க

    ReplyDelete
  3. அருமை அருமை அற்புதம்! மிகச் ச்வார்சயமாக ரொம்ப அழகாக எழுதுகிறீர்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. சிலருக்கு அவையடக்கம் கிடையாது. தன்னை மேதாவி என்று தானே முடிவு செய்து கொள்கிறார்கள்.

    ReplyDelete