Saturday, December 3, 2011

இது வரும் ஆனா வராது...


கோடம்பாக்கத்தில் கடந்த ஒரு வாரமாகவே ஒரே வாந்தி ச்சே சாந்தி ச்ச்சீ வதந்தி,அதாகப்பட்டது திருவாளர் வடிவேலு, அ.தி.மு.க.வுக்கு தாவப்போவதாக.
‘அம்மா கிட்டயே நேர்ல பேசீட்டார் அதனால சேத்துக்குவாங்க....ஓ.பன்னீர்செல்வம் கால்ல விழுந்து அம்மாகிட்ட கூப்பிட்டு போகச்சொல்லியிருக்கார் அதனால சேத்துக்குவாங்க...கருணாநிதியையும் விஜயகாந்தையும் திட்டிப்பேசுறதுக்கு சம்மதிச்சுட்டார்...அதனால சேத்துக்குவாங்க....இப்படி மொத்தம் ஒரு 316 வதந்திகள் கோடம்பாக்கத்தைச்சுற்றி நடக்கின்றன,ஓடுகின்றன,நொண்டியடிக்கின்றன.
இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் வடிவேலு தினமும் ஆபிஸ் வருகிறார். டிஸ்கஷனுக்கென்று சில அல்லக்கைகளூக்கு அழைப்பு விடுக்கிறார். பகலிலேயே கட்டிங் விட்டு ஷூட்டிங் கூப்பிடாத தமில் சினிமா துரோகிகளை கண்டபடி திட்டுகிறார்.
இரவு ஆளுக்கு அம்பது ரூபா டிப்ஸ் தந்து விட்டு வீட்டுக்கு எஸ் ஆகிறார்.
இந்த குடிவேளைகளில் சொந்தப்படம் எடுக்கச்சொல்லி ஐடியா கொடுப்பவர்களை மட்டும் விஜயகாந்த் பாணியில் சுவற்றில் கால் ஊன்றி ஒரே எத்து.
மத்தபடி அம்மாகிட்ட போற ஐடியா எல்லாம் இந்த கீரிப்புள்ள கிட்ட கிடையாது என்றுதான் சொல்கிறார்கள் அப்பப்போ க்ட்டிங் ல் கலந்து கொண்டவர்கள்.

No comments:

Post a Comment