Friday, December 9, 2011

தானும் மொட்டை அடித்துக்கொல்கிறார் பாலா...

’எரியும் தனல்’ பாலாவின் அடுத்த படம். டிஸ்கஷன் துவங்கி படம் ரிலீஸ் வரை தான் எதுவும் பேசாமல் தன்னைப்பற்றி எல்லோரும் ஏதாவது பேசும்படி நடந்து கொள்வது பாலாபாணி.எரியும் தனலைப் பற்றிய செய்திகளும் இப்போதே பற்றி எரிய ஆரம்பித்துவிட்டன.கேரள தேயிலைத் தொழிலாளர் களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல் தான் அப்படியே படமாகிறது. கதையைப் பற்றி எதுவுமே சொல்லாமல் முதலில் நாயகன் அதர்வாவின் அரைமண்டையை மொட்டை அடித்துவிட்டு தொப்பி மாட்டிக்கொள்ள சொன்ன பாலா,அடுத்து சுமார் 200 பெண்களை வரவழைத்து, அவர்களை மொட்டை அடிக்கும் வேலையில் இறங்கினார். இப்படி மொட்டை அடிக்க சம்மதிக்க  வைக்க  பெரிய தொகையை பாலா தர தயாராக இருந்தும் சுமார் 5000 பேரை அணுகியதில்தான் 200பேரைத்திரட்டமுடிந்ததாம்.

பெண்களின் இந்த மொட்டை வைபவம் நடந்துகொண்டிருந்தபோது,சில பெண்கள்,’’எப்படித்தான் பொம்பளைங்களுக்கு மொட்டை அடிக்க இவருக்கு மனசு வருதோ ‘’என்று முணுமுணுத்திருக்கிறார்கள்.

இதைக்கேட்ட பாலா,’’ஷூட்டிங் ஆரம்பிக்கிற அன்னைக்கி நானும் மொட்டை அடிச்சிக்கத்தான் போறேன். மூனு மாசத்தில திரும்ப முளைக்கப்போற மசுத்துக்கு இவ்வளவு புலம்புறீங்களே’’ என்றாராம்.

ராசா மசுரு மூனு மாசத்தில முளைச்சிரும்,ஆனா உங்க ஷூட்டிங் முடிய மூனு வருஷம் ஆகுமே என்று மனசுக்குள் மருகுகிறார் புரடக்‌ஷன் பொன்னுச்சாமி.



No comments:

Post a Comment