Tuesday, December 20, 2011

நிக்கட்டுமா ...போகட்டுமா நீல நயன் குயிலே...

 மாஸ்டர் பிரபுதேவாவைத் திருமணம் செய்துகொண்டு, இண்டஸ்ட்ரியை விட்டு பிரியாவிடை பெறப்போகிறார் நயன் தாரா  என்ற பீதியிலும், கூட ரெண்டு பெக்’ அடித்து வீதியிலும் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சற்றே ஆறுதலான சேதி ஒன்று கிடைக்கும்போல தெரிகிறது.

‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ படத்தில் சீதையாகவே வாழ்ந்து  ராமபக்தர்களை புல்லரிக்க வைத்த நயன் தாரா, அதைத்தான் தன் கடைசி படம் என்று அறிவிக்கவும் செய்தார்.

இதை ஒட்டி ரசிகர்கள் அடைந்த மனக்கொந்தளிப்பை அறிந்தோ என்னவோ, இறைவன் தன் நவீன திருவிளையாடலை, இயக்குனர் ராம்கோபால் வர்மா மூலம் துவங்கிவிட்டான்.
 ஸ்ரீராம ராஜ்யம்’ பார்த்து மற்றவர்களை விட அதிகமாக, அதாவது பெரும்புல்லரிப்பு அடைந்த வர்மாவுக்கு, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பத்தாவது நிமிடமே ஒரு கதை உதயமானதாம்.

சீதையாக நடித்த நயன் தாரா மண்டோதரியாக நடித்தால் எப்படி இருக்கும்? என்று அவரது மண்டையைத்தடவ ஆரம்பித்திருக்கிறார்.
.
‘நவீன ராமாயணா’ என்று டைட்டில் பிடித்து மெல்ல அதில் டிராவல் பண்ண ஆரம்பித்தார்.

அடுத்து நாகார்ஜுனாவுக்கு போனைப்போட்டு ‘’உங்களுக்கு பொருத்தமா ராவண ராஜுன்னு ஒரு கேரக்டர் புடிச்சிருக்கேன். உங்களுக்கு ஜோடியா மண்டோதரியா நயன் தாரா நடிக்கிறாங்க.’’

‘’அவங்க தான் இனிமே படம் நடிக்கப்போறதில்லைன்னு சொல்றாங்களே’’
நாகார்ஜுனா.

உங்களுக்கு ஓகேன்னா நயன் தாராவை திரும்ப நடிக்க வைக்கிறது என் பொறுப்பு’ என்றபடி பிரபுதேவாவை பார்க்கக்கிளம்பினார் வர்மா.

கல்யாணத்தை இன்னும் கொஞ்ச காலத்துக்கு தள்ளி வைக்க ஏதாவது சாக்கு கிடைக்காதா என்று காத்திருந்த பிரபு தேவாவுக்கு, ராம்கோபால் வர்மா ஒரிஜினல் ராமர் போலவே தெரிந்தார்.

மண்டோதரியோ, குண்டோதரியோ, நீங்க உடனே படத்தை ஆரம்பிங்கண்ணா’ என்று கும்பிட்டு வழி அனுப்பி வைத்தாராம் பிரபுதேவா.

அடுத்த கட்டமாக,மண்டோதரியிடம் மண்டியிட வந்தபோது, குழந்தைத் தனமாக ‘அவரு என்ன சொல்லுவாருன்னு தெரியலையே’ என்றாராம்.
பிரபுதேவாவிடம் ஆல்ரெடி ஓ.கே வாங்கியதை வர்மா சொல்ல சற்றே கன்ஃபியூஸ் ஆனாராம் நயன்.

தனக்கு யோசிக்க சில தினங்கள் அவகாசம் வேண்டும் என்று வர்மாவை அனுப்பி வைத்துவிட்டு ‘மாஸ்டர் ஹெல்த் செக் அப்’ ஒன்று பண்ணலாமா என்று யோசித்து வருகிறாராம்.
தகவல்களை புட்டுப்புட்டாக வைப்பது உங்கள் புரடக்‌ஷன் பொன்னுசாமி.

No comments:

Post a Comment