Friday, December 16, 2011

மெத்த வாங்குனேன்..தூக்கத்த வாங்கலை..டி.ஆரின் புதிய படம்

என்ன செய்யிறது ,சில துக்கச்செய்திகளை, அந்த ஆண்டவனே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாதுங்கிறப்ப,
ஒத்த மனுஷியா நின்னு உஷாக்கா மட்டும் தடுத்து நிறுத்திட முடியுமா என்ன?
‘வீராசாமி; படம் பார்த்து வீரமரணம் அடைஞ்சவ்ங்களோட ஆத்மா அரைகுறையா சாந்தி அடையிறதுக்குள்ள,
 அண்ணன் டி.ஆர் அடுத்த படத்தை ஆரம்பிச்சிட்டார்.

’அப்பா வேண்டாம்பா, நிறைய தற்கொலை கேஸ்லாம் நம்ம மேல வரும்னு சிம்புவும், எவ்வளவோ தடுத்துப்பார்த்திருக்கார்.

’’எடுக்காதே படம் எடுக்காதே’’ன்ன, சிம்பு கிட்ட ‘’தடுக்காதே என்னை தடுக்காதே’ன்னு, பதிலடி குடுத்துட்டு, கிங்கு மாதிரி நமக்கு சங்கு ஊதக்கிளம்பிட்டாரு அண்ணன்.

படத்தோட பேரு’ஒருதலைக் காதல்’ .என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைங்கிற மாதிரி அண்ணன் படத்துல மதுரை பாஷை பேசி நடிக்கிறாராம்.
கதைப்படி, அண்ணன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத வாலிப வயசு இளைஞர்.ஒரு கட்டத்துல அண்ணனுக்கு ஒரு அண்ணி மேல லவ் மூட் ஸ்டார்ட் ஆகுது..மெத்தப்படித்த மேதையான மும்பை அண்ணி அண்ணனை கொஞ்சமும் கண்டுக்காம இன்சல்ட் பண்றாங்க.( இந்த சிச்சுவேசனுக்கு அண்ணன் எழுதின ஒரு பாட்டு..
மழைக்கு கூட ஒதுங்கலை பள்ளிக்கூடம்...
விலைக்கு கூட கிடைக்கலை வெள்ளிக்குடம்’’
கொலவெறியில எழுதியிருக்கார்.)
சரி கதைக்கு வருவோம்.
 அண்ணன் படிப்புலதான் வீக்கே ஒழிய, மியுசிக்ல அவர் ஒரு பெரிய டெர்ரர். அண்ணிக்கு இது புரியல.
இத புரிஞ்சிகிட்ட வேற ரெண்டு பொண்ணுங்க அண்ணனை லவ் பண்றதுக்காக பின்னாடியே ஹட்ச் டாக் மாதிரி அலயிறாங்க.நம்ம அண்ணன் தான் எல்லாபடத்துலயும் ஏகபட்டினிவரதனச்சே, இவங்களைக் கண்டுக்கிறதேயில்ல.
க்ளைமேக்ஸ்ல அண்ணனோட அருமை, ஒரு பாட்டு மூலமா அண்ணிக்கு தெரிய வர்றப்ப...இனி பாண்டிய நாட்டில் அண்ணனைத்தவிர ,ஒரு பயலும் வாயத்தொறந்து பாட முடியாதுங்கிற சிச்சுவேசன்ல.,.அண்ணி தன்னோட லவ்வ  சொல்றதுக்காக  அண்ணனைத்தேடி வர்றப்ப...
...
. ஓ  நோ....மீதிய நான் சொல்லமாட்டேன்.

இன்னொரு முக்கியமான நியூஸையும் உங்க கூட பகிர்ந்துக்கலைன்னா எனக்கு தலை வெடிச்சிடும்.

கோடம்பாக்கத்தில இது காம்பினேசன் சீஸன்.இதைப் புரிஞ்சிக்கிட்ட டெர்ரர் ஸ்டாரும்,  பவர்ஸ்டாரும் அடுத்து கூட்டணி அமைச்சி மல்டிஸ்டார் படம் ஒண்ணு பண்ணப்போறதா ஒரு படபடப்பான நியூஸ்  நடமாடிக்கிட்டிருக்கு..
யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்.தொடர்ந்து பிரார்த்தனை பண்ணுங்க.

எப்பவுமே சோதிக்கிற ஆண்டவன், என்னைக்காவது ஒருநாள் கண்ணு முழிச்சி பாக்காமயா போயிடுவான்?

No comments:

Post a Comment