Saturday, December 10, 2011

குமுதத்தின் மீது கொலவெறியில் சிம்பு....

இந்த கொலவெறி என்றவார்த்தையை யாரும் அடுத்த 6 மாதத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று கோர்ட்டில் யாராவது தடை வாங்க மாட்டார்களா? ‘ஏங்கும் உண்மைத்தமிழன்களில் நானும் ஒருத்தன்.
ஆனால் என்ன செய்வது இது கொலவெறி மாசம்போல. எதைத்தொட்டாலும் அதிலேயே போய் முடிகிறது.
விஜய்க்கு அடுத்தபடியாக, வம்புத்தம்பி சிம்புவுக்கு எதிரிகள் ஜாஸ்தி.
இந்த முறை ‘ஒஸ்தி’ ரிலீஸை ஒட்டி, அவரை பண்ணிவிட்டார்கள் நாஸ்தி.
இப்படி தன்னை நாஸ்தா பண்ணுபவர்கள் பட்டியலில் குமுதமும் வந்து குந்தும் என்று சிம்பு கொஞ்சமும் எதிபார்க்கவில்லை.
ஏனெனில் கொஞ்சகாலத்துக்கு முன்புவரை, சிலம்பு எங்கேயாவது கிளம்பினால்கூட,’’எங்கேயோ கிளம்பிட்டீங்க போல? என்று பேட்டி எடுத்துப்போட்டது குமுதம்.
ஆனால் சமீபகாலமாக சிம்புவுக்கு எதிரான நிலையைக்கையாண்டு,அவரைப்பற்றிய காண்ட்ரவர்ஷிகளை தேடித்தேடி போட ஆரம்பித்தார்கள்.
பாரில் ரெகுலராக நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி குமுதம் ரிப்போர்ட்டரில் கவர்’ ஸ்டோரியானது.
புதைத்த இடத்தில் மரமே முளைத்துவிட்ட ‘மன்மதன்’ பிரச்சினையை மீண்டும் ஆழமாகத்தோண்டினார்கள்.’மன்மதன் முருகன் தன் பங்குக்கு சிம்புவை தின்னுதீர்த்தார்.
சினிமாவில் திரைக்கு வருகிற படங்களைவிட,டிராப் ஆகிற படங்களே அதிகம் என்றிருக்கக்கூடிய சூழலில், அப்படி டிராப்பான ஒரு படமான ‘கெட்டவன்’ பட டைரக்டரைத்தேடிப்பிடித்து,சிம்புவைத்திட்டோ திட்டென்று திட்ட வைத்தார்கள்.
இதையும் படித்தபிறகு சிம்புவுக்கு அந்த’ வெறிதான் வந்தது.
முந்தி அப்பிடி இருந்தவங்க, இப்ப ஏன் இப்பிடி ஆயிட்டாங்க ,என்று குழம்பிப்போயிருக்கும் சிம்புவுக்கு..
குமுதம் பாணியிலேயே ஒரு சின்ன பிட்டு நியூஸ்.
அங்கே நடக்கும் நிர்வாகச்சண்டை ஊர் அறிந்தது.(தெரியாதவங்க கூச்சப்படாம கேட்டுத்தெரிஞ்சுக்கங்க)

சிம்புவின் பெஸ்ட் ஃப்ரண்டான தற்போதைய சினிமா நிருபர் ஜவஹர் பழனியப்பனின் ஆள். தனக்கு வேண்டாத சில சப்-எடிட்டர்களை டெல்லிக்கும் மும்பைக்கும் டிரான்ஸ்பர் செய்வதாக மிரட்டி  தன்பக்கம் பணிய வைத்தது போல் இதுவும் ஒரு வகையான மிரட்டல் டெக்னிக்.
நிருபருக்கு மிகவும் வேண்டியவர்களைப்பற்றி தொடர்ந்து தாக்கி எழுதினால்,அந்த நிருபர் என்ன செய்வார்? ஒன்று பத்திரிகையை விட்டுவிட்டு ஓடுவார்.அல்லது சரணாகதி அடைவார்.
இதுதான் இப்போதைய குமுதம் நிர்வாகத்துக்கு வேண்டும்.
தொடர்ந்து உங்களையே ஏன் திட்டித்திட்டி விளையாடுறாங்கன்னு இப்ப புரியுதா வம்புத்தம்பி?
(ரெண்டாவது ஸ்டில்ல ‘அது’ க்காக நான் வச்சிருக்கேன்)

No comments:

Post a Comment